Thursday, August 30, 2012

மக்களின் வளர்ச்சியே நாட்டின் மேண்மை



சுதந்திர அடைந்து இன்றுடன் 55 வருடம் அடைந்து விட்டது, நாட்டின் வளர்ச்சியில் இந்திய மக்களின் பங்களிப்பும் பெரும்பங்காற்றியது என்றால் அது மிகையாகாது.சுதந்திரம் அடைவதற்கு முன்பதாகவே நம் இந்தியர்களின் பங்களிப்பு பெரிதும் உருதுணையாக இருந்துள்ளது என்பது வரலாறு.
மலேசியாவின் சிறப்பு அம்சங்களில் ஒன்றான  சுபிட்சமான வாழ்க்கை முறை உலக அளவில் வியப்பாக பேசப்பட்டு வருகிறது. பல இன மக்கள் அமைதியாகவும் புரிந்துணர்வுடணும் வாழும் காட்சி மலையகத்தை தவிர வேறு எந்த நாட்டில் காணமுடியும்.
இருந்த்த போதிலும் ஒரு சிலர் தங்களின் சுய நலத்திற்காக ஊறு விளைவிக்க முற்படுவது கண்டிக்கத்தக்கது. மலேசியா என்பது குடிமக்கள் அனைவருக்கும் சொந்தமான ஒரு இடம். ஆனால் இதை அரசியல் நோக்கத்திற்காகவும் தனி பட்ட நபரின் சுயநலத்திற்காகவும் கேடு விளைவிக்க முற்படுகின்றனர். ஒரு குடிமகனாக எச்சரிக்க கடமைப்பட்டுள்ளேன்.
மலேசியாவிற்கு எனது 55 வது சுதந்திர தின வாழ்த்துகள்!!


                        




No comments:

Post a Comment

How to keep your employees respectful