Sunday, January 30, 2011

லண்டனில் மலேசிய மாணவி கற்பழிப்பு - ரஷ்ய நாட்டவர்கள் அட்டூழியம்

லண்டனில் படித்து வந்த மலேசிய மாணவி ஒருவரை கும்பல் ஒன்றால் பலாத்காரமாக கற்பழிக்கப்பட்டுள்ளார். இந்த மாணவிக்கு வயது 18. இவரைக் கற்பழித்தவர்கள் ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர்கள்.

அவர் தெற்கு லண்டன் கிரீன்வீச்சில் இருக்கும் பிரஸ்டீஜ் பெல்லர்பிஸ் என்ற கல்லூரியில் படித்து வருகிறார். அங்கு நடந்த ஒரு இரவு விருந்தில் கொண்டிருந்திருக்கார் இந்த மாணவி.

அவர் அழகில் மயங்கிய ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஏழு நபர்கள் அவருக்கு போதை மருந்து கலந்து பானத்தை கொடுத்திருக்கிறார்கள். தன்னிலை மறந்த நிலைக்கு ஆளான அந்த மாணவியை அவர்கள் மாறி மாறி கற்பழித்திருக்கிறார்கள்.

இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்தது. இந்தக் கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் உளவுத்துறை அதிகாரியும் ஒருவர். இவரோடு சேர்த்து அந்த ஏழுபேரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இதில் இரண்டு பேர் ஜாமீனில் வெளி வந்திருக்கிறார்கள். ஒருவர் நிபந்தனை இன்றி விடுவிக்கப்பட்டார். மற்றவர்கள் விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

No comments:

Post a Comment

How to keep your employees respectful